Kathir News
Begin typing your search above and press return to search.

வீட்டு வேலைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி செயலாளர்! 17 வயது மகளுக்கு வைக்கப்பட்ட குறி!

வீட்டு வேலைக்கு வந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஊராட்சி செயலாளர்! 17 வயது மகளுக்கு வைக்கப்பட்ட குறி!

MuruganandhamBy : Muruganandham

  |  9 March 2021 4:11 AM GMT

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி நம்பன்பட்டி கிராமத்தை சேர்ந்த சுந்தரமூர்த்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஊராட்சி செயலாளராக இருந்து வருகிறார்.

இவரது வீட்டில் கடந்த 6மாதங்களுக்கு முன்னர் வரை, கணவரை இழந்த முத்துமணி என்ற பெண் கூலி வேலை செய்து வந்துள்ளார். அப்பெண்ணின் இயலாமையை பயன்படுத்திக்கொண்ட சுந்தரமூர்த்தி, அவ்வப்போது முத்துமணிக்கு பாலியல் தொல்லை அளித்து சில்மிஷம் செய்து வந்துள்ளார்.

ஒருகட்டத்தில் ரொம்ப அத்துமீறி சென்றதால், முத்துமணி அது பிடிக்கவில்லை. சுந்தரமூர்த்தியின் இல்லத்திற்கு பணிக்கு செல்லாமல் இருந்துள்ளார்.

இதன்பின்னர், பலமுறை சுந்தரமூர்த்தி பெண்ணுக்கு தொடர்பு கொண்டு வீட்டு வேலைக்கு வருமாறு அழைத்த நிலையில், முத்துமணி அதற்கு மறுப்பு தெரிவித்துள்ளார். இதனால் ஆதிராமடைந்த அவர், முத்து மணியின் 17 வயது மகளுக்கு திருமணம் நடைபெற இருப்பதாக பத்திரிகை அச்சடித்து பல்வேறு இடங்களில் விநியோகம் செய்துள்ளான்.

மேலும், முத்துமணியின் குடும்பத்தினரை அவமானப்படுத்தும் பொருட்டு வீடு புகுந்து முக்கிய ஆவணங்களை களவாடி சென்றுள்ளார். அவர்களின் ஆதார் கார்டு மற்றும் பான்கார்டு ஆவணங்கள் மாயமாகியுள்ளது. இது குறித்து முத்து மணி சுந்தர மூர்த்தியிடம் கேட்ட போது கொலை மிரட்டலும் விடுக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து முத்துமணி ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரை ஏற்ற காவல் துறையினர் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, சுந்தரமூர்த்தியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News