Kathir News
Begin typing your search above and press return to search.

சாதனை படைத்த 7 பெண்கள்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திவ்யலட்சுமி விருதுகள் அறிவிப்பு!

சாதனை படைத்த 7 பெண்கள்: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு திவ்யலட்சுமி விருதுகள் அறிவிப்பு!

Bharathi LathaBy : Bharathi Latha

  |  6 March 2021 11:42 AM GMT

ஒவ்வொரு வருடமும் சமூகத்தில் பல மாற்றங்களை கொண்டுவரும் பெண்களுக்காக KGiSL நிறுவனம் பல்வேறு விருதுகளை வழங்கி அவர்களை கௌரவித்து வருகிறது. அந்த வகையில் இந்த வருடமும் மார்ச் 8ஆம் தேதி சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இந்த வருடம் சாதனைகளைப் படைத்த 7 பெண்களை, பாராட்டி விருதுகள் வழங்கிய KGiSL நிறுவனம்.

கோவையை சேர்ந்த மறைந்த KGiSL நிறுவனத்தின் இயக்குனருமான திவ்யலட்சுமி அசோக் நினைவாக இந்திய அளவில் சுய முன்னேற்றம் அடைந்த பெண் சாதனையாளர்களை பாராட்டி திவ்யலட்சுமி என்ற விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.


இதன் தொடர்ச்சியாக இந்தாண்டு சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புகழ் பெற்ற பெண் சாதனையாளர்களை சமூகத்திற்கு அடையாளப்படுத்தி பாராட்டும் விதமாக ஏழு பெண்களின் சாதனைகளை பாராட்டி திவ்யலட்சுமி விருதுகள் வழங்கப்பட்டது.


இதில் இயற்கை விவசாயி என பத்மஸ்ரீ விருது பெற்ற பாப்பம்மாள், இந்திய ராணுவ மற்றும் விமான பாதுகாப்பு படையை சேர்ந்த திவ்யா அஜித்குமார், அதிஜீவன் அறக்கட்டளையின் நிறுவனரும் ஆசிட் தாக்குதலில் மீண்டவர் பிராக்யா பிரசுன், ஸ்கிசோ ப்ரினியா ஆராய்ச்சி அறக்கட்டளையின் இணை நிறுவனர் தாரா சீனிவாசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் பார்வைத்திறன் இன்றி போராடும் வழக்கறிஞர் கற்பகம் மாயவன், திருநங்கைகளின் உரிமை ஆர்வலர் கல்கி சுப்பிரமணியம் ஆகியோரை பாராட்டி இந்த ஆண்டுக்கான சாதனையாளர்கள் விருதுகள் வழங்கப்பட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News