Kathir News
Begin typing your search above and press return to search.

"பயம் வேண்டாம், காலம் அனைத்தையும் மாற்றும்" வைகைப்புயல் வடிவேலு நம்பிக்கை..!

பயம் வேண்டாம், காலம் அனைத்தையும் மாற்றும் வைகைப்புயல் வடிவேலு நம்பிக்கை..!

Mohan RajBy : Mohan Raj

  |  21 May 2021 8:30 AM GMT

பயம் வேண்டாம், காலம் அனைத்தையும் மாற்றும்! கொரோனாவை எல்லோரும் சேர்ந்து, அரசு சொல்வதை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் வெல்வோம் என வடிவேலு தெரிவித்துள்ளார்.

தமிழ் சினிமாவில் "வைகைப்புயல்" என ரசிபர்களால் போற்றப்படும் நகைச்சுவை நடிகர் வடிவேலு, தமிழ்சினிமா வரலாற்றில் இருந்து பிரிக்க இயலாத முக்கியமான கலைஞன். இவர் தற்பொழுது கொரோனோ சம்மந்தமான விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.


அதில், "கொரோனாவால் பீதி ஏற்பட்டு உள்ளது. வெளியே போக கூடாது. யாரையும் தொட்டு பேசக்கூடாது. கை கொடுக்க கூடாது என்கின்றனர். மருத்துவ உலகத்தையும், மனித உலகத்தையும் மிரட்டி வைத்துள்ளது கொரோனா. இந்த மாதிரி யாருமே பார்த்தது இல்லை.

என்னிடம் ஒரு அம்மா எப்போது நடிக்க போகிறீர்கள் என்று கேட்டார். இப்போது நடிக்க வருவதற்கும் படம் எடுப்பதற்கும் ஆள் தயாராக இல்லை. படம் பார்க்க வருவதற்கும் யாரும் இல்லை. அப்புறம் எப்படி நான் தனியாக போய் நடிப்பது. இறைவன் கொரோனா என்ற ஒரு படத்தை ரிலீஸ் செய்து இருக்கிறான். கொரோனா படத்தை இறைவன் எப்போது தூக்குவான் என்றே தெரியவில்லை" என்றார்.

மேலும், "பயம் வேண்டாம். கொரோனாவை எல்லோரும் சேர்ந்து, அரசு சொல்வதை கேட்டு வீட்டை விட்டு வெளியே வராமல் தொட்டு பேசாமல் வெல்வோம்" என அந்த விழிப்புணர்வு வீடியோவில் பேசியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News