Kathir News
Begin typing your search above and press return to search.

"அந்த சினிமா வெளியானால் தமிழகம் போர்க்களமாகும்" - வெடிக்கும் வைகோ!

அந்த சினிமா வெளியானால் தமிழகம் போர்க்களமாகும் - வெடிக்கும் வைகோ!

Mohan RajBy : Mohan Raj

  |  24 May 2021 9:00 AM GMT

தமிழர்கள் தீவிரவாதிகளா என The Family Man 2 இந்தித் தொடரை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கடிதம் எழுதியுள்ளார்.


அதில் குறிப்பிட்டுள்ளதாவது, "இந்தி மொழியில் வெளியாகும் இந்தத் தொடரின் முன்னோட்டக்காட்சிகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றது. தமிழர்களை பயங்கரவாதிகள் ஆகவும், பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஏஜெண்டுகள் உடன் தொடர்பு கொண்டவர்களாகவும் சித்தரித்து இருக்கின்றார்கள். தமிழ் ஈழ விடுதலைப் போரில் தங்கள் இன்னுயிர்களை ஈந்த ஈழப் போராளிகளையும் கொச்சைப்படுத்தி இருக்கின்றனர். ராணுவ சீருடை அணிந்த சமந்தா என்ற தமிழ் பெண் பாகிஸ்தானியர்களுடன் தொடர்பு வைத்து இருப்பதாகக்காட்சிகள் இருக்கின்றன. இத்தகைய காட்சிகளைக் கொண்ட இந்தத் தொடர் தமிழ் பண்பாட்டுக்கு எதிரானது


தமிழர்களின் உணர்வுகளைப் புண்படுத்துகின்றது. அமேசான் ஓடிடி தளத்தில் இந்தத் தொடரை ஒளிபரப்பினால் தமிழ்நாட்டில் போராட்டங்கள் வெடிக்கும் என்பதைத் தங்கள் கவனத்திற்கு கொண்டு வருகின்றேன். The Family Man 2 தொடர் ஒளிபரப்பைத் தடை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றேன்" இவ்வாறு வைகோ கோரிக்கை விடுத்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News