Kathir News
Begin typing your search above and press return to search.

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்களுக்கு நிதி உதவி!

நடிகர் சூர்யா மற்றும் கார்த்தி ரசிகர்களுக்கு நிதி உதவி!

ParthasarathyBy : Parthasarathy

  |  9 Jun 2021 1:31 PM GMT

இந்த கொரோனா காலத்தில் பலர் கஷ்டப்பட்டிருக்கும் நிலையில் உதவ விருப்பம் உள்ளவர்கள், தமிழக அரசு அறிவித்துள்ள முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு அளிக்கலாம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். இதனை தொடர்ந்து நடிகர் சிவகுமார் மற்றும் அவரின் மகன்கள் சூர்யா,கார்த்தி ஆகியோர் இந்த நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாயை ஸ்டாலினிடம் நேரில் சந்தித்து வழங்கினர்.


கொரோனாவால் சூர்யாவின் ரசிகர்கள் பலர் போதிய வருமானம் இல்லாமல் கஷ்டப்படுவதாக சூர்யாவிற்கு தெரிய வந்தது. இந்த நிலையில் நடிகர் சூர்யா அவருடைய ரசிகர்மன்ற நிர்வாகிகள் 250 பேருக்கு தலா ₹5000 நிதி உதவி வழங்கினார். இதையே போல் நடிகர் கார்த்தியும் அவருடைய ரசிகர்மன்ற நிர்வாகிகள் 150 பேருக்கு தலா ₹5000 வழங்கியுள்ளார். இந்த நிதி உதவி சம்பந்தப்பட்ட நபர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. இதனை அறிந்த ரசிகர்கள் மிகவும் மகிழ்ச்சியடைந்து அவர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News