Begin typing your search above and press return to search.
'ஏ.ஆர்.ரஹ்மானா? யார் அது?' என கேட்ட தெலுங்கு நடிகர் : கொந்தளிக்கும் ரசிகர்கள்!

By :
"ஏ.ஆர்.ரஹ்மான் யார் என்றே எனக்கு தெரியாது" என பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா கூறியது சர்ச்சையாகியுள்ளது.
பிரபல தெலுங்கு நடிகர் நந்தமூரி பாலகிருஷ்ணா, இசையமைப்பாளர் ஏ. ஆர்.ரஹ்மானை விமர்சித்து பேசியது சமூக ஊடகங்களில் பரபரப்பாகி உள்ளது. ஒரு தனியார் தெலுங்கு ஊடகத்திற்கு பேட்டியளித்த பாலகிருஷ்ணா, ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய கேள்விக்கு அவர் ஆஸ்கர் விருது வாங்கி இருக்கலாம், ஆனால் அவர் யார் என்றே எனக்கு தெரியாது என்றும், பாரத ரத்னா போன்ற விருதுகள் என்.டி.ஆரின் கால் விரலுக்கு சமம் என்றும் கூறியுள்ளார்.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியதோடு, பாலகிருஷ்ணாவின் இந்த கருத்துக்கு கடும் கண்டனங்களும் எழுந்து வருகின்றன.
Next Story