Kathir News
Begin typing your search above and press return to search.

விஜய் இனி மத்திய அரசை பற்றி பேச மாட்டார் - போட்டு உடைத்த தயாரிப்பாளர்!

விஜய் இனி மத்திய அரசை பற்றி பேச மாட்டார் - போட்டு உடைத்த தயாரிப்பாளர்!
X

Mohan RajBy : Mohan Raj

  |  23 Sept 2021 4:00 PM IST

"மெர்சல் படத்திற்கு பிறகு மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே செய்வதில்லை" என தயாரிப்பாளர் கே.ராஜன் பேசியுள்ளார்.


ருத்ரன் இயக்கத்தில் உருவாகியுள்ள ₹2000 திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் கலந்துகொண்டு பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் விஜயை பற்றிய விமர்சனத்தை முன் வைத்தார்.


அப்போது பேசிய அவர் கூறியதாவது, "மெர்சல் படத்தில் ஜி.எஸ்.டி தொடர்பாக சிறிய விமர்சனத்தை முன்வைத்ததால் நடிகர் விஜய்க்கு 12 மணி நேரம் மன உளைச்சல் கொடுத்து விட்டார்கள். நெய்வேலியில் படப்பிடிப்பில் இருந்தவரை சென்னை அழைத்து வந்து விசாரித்தார்கள். அவர்களுடைய காரில் அழைத்துவரும்போது விஜயை என்ன என்ன செய்தார்களோ, அந்த படத்திற்கு பிறகு மத்திய அரசு பற்றி விஜய் விமர்சனமே செய்வதில்லை... விஜய் பயந்து போய் விட்டார். ஏனென்றால் அவர் கோடீசுவரர்" என்றார் அவர், விழாவிற்கு வந்தவர்கள் சற்று அதிர்ந்து போனார்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News