Kathir News
Begin typing your search above and press return to search.

ஏன் தேவையில்லாம சி.எம் எல்லாம் இழுக்கிறீங்க புலம்பும் பிரகாஷ்ராஜ் !

ஏன் தேவையில்லாம சி.எம் எல்லாம் இழுக்கிறீங்க புலம்பும் பிரகாஷ்ராஜ் !

Mohan RajBy : Mohan Raj

  |  2 Oct 2021 8:00 AM GMT

"தெலுங்கு மாநில இரு முதல்வர்களையும் தேவையில்லாமல் இந்தத் தேர்தலில் சம்பந்தப்படுத்தி இந்தத் தேர்தலுக்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள்" என பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.





தெலுங்கு நடிகர் சங்கமான 'மா' சங்கத்திற்கு நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் அக்டோபர் 10ம் தேதியன்று நடைபெற உள்ளது. இதில் இரு அணிகளாக பிரகாஷ் ராஜ் தலைமையில் ஒரு அணியும், மஞ்சு விஷ்ணு தலைமையில் மற்றொரு அணியும் போட்டியில் உள்ளனர்.





தற்பொழுது தேர்தலுக்கு மிக குறுகிய காலமே இருக்கும் நிலையில் பிரகாஷ் ராஜ் கருத்து ஒன்றே தெரிவித்துள்ளார். அதில், "எதிரணியினர் தேவையில்லாமல் தெலுங்கு மாநிலங்களின் இரு முதல்வர்களையும் இந்தத் தேர்தலில் இழுக்கின்றனர். அவர்கள் இருவருமே மிகவும் பிஸியாக உள்ளனர். அவர்கள் இந்தத் தேர்தலில் ஆர்வம் காட்டவும் இல்லை. அவர்களைத் தேவையில்லாமல் இந்தத் தேர்தலில் சம்பந்தப்படுத்தி இந்தத் தேர்தலுக்கு அரசியல் சாயம் பூசுகிறார்கள்" என குறிப்பிட்டுள்ளார்.

Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News