Kathir News
Begin typing your search above and press return to search.

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் மிரட்டி ஓட்டு வாங்கினார்கள் - பிரகாஷ்ராஜ் கதறல் !

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் மிரட்டி ஓட்டு வாங்கினார்கள் - பிரகாஷ்ராஜ் கதறல் !

Mohan RajBy : Mohan Raj

  |  16 Oct 2021 2:00 AM GMT

தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் மோகன்பாபு வன்முறையில் ஈடுபட்டார் என பிரகாஷ்ராஜ் குற்றம் சுமத்தியுள்ளார்.





சமீபத்தில் நடைபெற்ற தெலுங்கு நடிகர் சங்க தேர்தலில் மோகன் பாவுவின் மகன் விஷ்ணு மஞ்சு வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பிரகாஷ்ராஜ் தோல்வியை தழுவினார் அதற்கு காரணமாக வன்முறை என குற்றம் சுமத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் தேர்தல் அதிகாரியாக செயல்பட்ட கிருஷ்ண மோகனுக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது, "சமீபத்தில் முடிந்த நடிகர் சங்க தேர்தலில் நடந்த பல துரதிர்ஷ்டவசமான சம்பவங்களுக்கு நீங்கள் சாட்சியாக இருந்தீர்கள். முன்னாள் டிஆர்சி உறுப்பினர் மோகன் பாபுவும், முன்னாள் தலைவர் நரேஷும் சமூக விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதை நாங்கள் பார்த்தோம்.





சங்க உறுப்பினர்களை அடித்து, வசைபாடி, அச்சுறுத்தினர். உங்களுக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அவர்களையும், அவர்களின் அடியாட்களையும் வாக்குச்சாவடிக்குள் நீங்கள் அனுமதித்தீர்கள் என்று நான் நினைக்கிறேன். வாக்குச்சாவடியில் சிசிடிவி கேமராக்களில் எல்லாம் பதிவாகியிருக்கிறது என்று எனக்குத் தெரியும். எனவே அந்தப் பதிவுகளை எங்களிடம் பகிர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தேர்தல் சம்பந்தமான அத்தனை தரவுகளையும் பெறுவது எங்கள் ஜனநாயக உரிமை. தேர்தல் அதிகாரியான நீங்கள், அத்தனை சாட்சியங்களையும் 3 மாதங்கள் பாதுகாப்பது உங்கள் கடமை.

எனவே அந்தக் காணொலிப் பதிவுகளை எவ்வளவு சீக்கிரம் முடியுமோ தரவேண்டும் என்று உங்களைக் கேட்டுக் கொள்கிறேன். நீங்கள் உடனடியாகச் செயல்படாவிட்டால் அந்தப் பதிவுகள் அழிக்கப்பட்டுவிடும் என்று நான் அஞ்சுகிறேன்" என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News