Kathir News
Begin typing your search above and press return to search.

மக்கள் அன்பினால் கிடைத்த விருது - சூப்பர் ஸ்டார் நெகிழ்ச்சி !

மக்கள் அன்பினால் கிடைத்த விருது - சூப்பர் ஸ்டார் நெகிழ்ச்சி !

Mohan RajBy : Mohan Raj

  |  24 Oct 2021 9:45 AM GMT

மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் கிடைத்த உயரிய வருது என தாதா சாகேப் பால்கே விருது கிடைத்தமைக்கு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.





தமிழ் திரையுலகிலிருந்து சிவாஜி, கே.பாலசந்தர் ஆகிய இருவர் மட்டுமே பெற்ற தாதா சாகேப் விருதினை 2019-ம் ஆண்டிற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்'ற்கு அறிவிக்கப்பட்டது. டில்லியில் நாளை (அக்டோபர் 25) நடைபெறும் விழாவில் ரஜினிகாந்த்-க்கு விருது வழங்கப்படவுள்ளது.





இதனையடுத்து இன்று விருது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "எனக்கு இரண்டு முக்கியமான நிகழ்வுகள் நடைபெற இருக்கிறது. ஒன்று, மக்களின் அன்பினாலும், ஆதரவினாலும் திரையுலகின் உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதினை மத்திய அரசு எனக்கு வழங்கவுள்ளது. இரண்டாவது, என்னுடைய மகள் சவுந்தர்யா விசாகன், அவருடைய சொந்த முயற்சியில் மக்களுக்கு மிகவும் பயன்படக்கூடிய HOOTE என்கிற ஆப்பை உருவாக்கி அதை அறிமுகப்படுத்தவுள்ளார்.

அதில் மக்கள் தாங்கள் மற்றவர்களுக்கு எழுத்து மூலம் தெரிவிக்க விரும்பும் கருத்துகளையும், விஷயங்களையும், இனி அவர்களது குரலிலேயே எந்த மொழியிலும் ‛HOOTE APP மூலமாக பதிவிடலாம். இந்த வரவேற்கத்தக்க புதிய முயற்சியான HOOTE APP-ஐ என் குரலில் பதிவிட்டு துவங்க உள்ளேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News