மழை வெள்ளத்தில் சிக்கி வீணாகிவிட்டதா ராஜ்கமல் நிறுவனத்திற்கு சொந்தமான அரிய கலை பொருள்கள் ?

By : Mohan Raj
சென்னை மழை வெள்ளத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனத்திற்கு சொந்தமான பல கோடி ரூபாய் பொருள்கள் சேதமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களுக்கு சொந்தமானது ராஜ்கமல் ப்லிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம். இது 1981 -ம் ஆண்டு ஹாசன் சகோதரர்கள் என்ற பெயரில் ராஜ பார்வை திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்ட பின்னர் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேசனல் என இந்நிறுவனத்தின் பெயர் மாற்றப்பட்டது. தற்போது கமல்ஹாசனின் சகோதரர்கள், சாருஹாசன் மற்றும் சந்திரஹாசனின் கீழ் இந்நிறுவனம் செயல்பட்டு வருகின்றது. இந்த நிறுவனத்தில் தயாரிக்கப்பட்ட படங்கள், மேலும் மருதநாயகம் படத்திற்காக சேகரிக்கப்பட்ட பொருள்கள், கலைத்துறையை சேர்ந்த பொருள்கள் ஆகியவை கமல்ஹாசன் அவர்களுக்கு சொந்தமான குடோனில் வைக்கப்பட்டிருந்தது.
சென்னையில் மிகப்பெரிய கட்டிடமாக இது மலை வெள்ளத்தில் தற்போது தத்தளித்து வருவதாக சொல்லப்படுகிறது. கட்டிடத்திற்குள் புகுந்த தண்ணீரால் அங்கு வைக்கப்பட்டிருக்கும் பொருட்கள் வீணாகியுள்ளதாக சொல்லப்படுகிறது.
