Begin typing your search above and press return to search.
துல்கர் சல்மானின் 'குரூப்' படத்திற்கு தடை விதிக்க மறுத்த நீதிமன்றம் !

By :
துல்கர் சல்மான் நடித்து நேற்று வெளியான 'குரூப்' படத்திற்கு நீதிமன்றம் தடை விதிக்க மறுத்துள்ளது.
துல்கர் சல்மான் தயாரித்து, நடித்த படம் குரூப், நேற்று வெளியானது. இந்திரஜித் சுகுமாறன், ஷோபிதா துலிபாலா உள்பட பலர் நடித்துள்ளனர். இயக்குனர் ஸ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கி உள்ளார். இப்படம் கேரளா போலீஸ் மற்றும் சர்வதே போலீஸ் அமைப்பான இண்டர்போல் ஆகியவற்றால் 1984ம் ஆண்டு முதல் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட சுகுமார குரூப் என்பவரின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது.
இப்படத்தை தடைவிதிக்க வேண்டும் என்று கொச்சியை சேர்ந்த செபின் தாமஸ் என்பவர் கேரள உயர்நீதி மன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் படத்திற்கு தடைவிதிக்க மறுத்து விட்டது. இது கேரள திரையுலகில பரபரப்பாக பேசப்படுகிறது.
Next Story