Kathir News
Begin typing your search above and press return to search.

'எதற்கும் துணிந்தவன்' சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

எதற்கும் துணிந்தவன் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு

Mohan RajBy : Mohan Raj

  |  17 Nov 2021 10:15 AM GMT

சென்ன தியாகராய நகரில் உள்ள நடிகர் சூர்யா வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.





நடிகர் சூர்யா நடித்துள்ள ஜெய்பீம் திரைப்படம் சர்ச்சையில் சிக்கி உள்ளது. பா.ம.க. சார்பில் அந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி நடிகர் சூர்யாவுக்கு மிரட்டல்கள் வந்த வண்ணம் உள்ளது. நடிகர் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வன்னியர் சங்கம் சார்பில் வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு முன்னெச்சரிக்கையாக நடிகர் சூர்யாவின் வீட்டுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போட கமிஷனர் சங்கர்ஜிவால் உத்தரவிட்டார்.





சூர்யாவுக்கு தனிப்பட்ட முறையில் துப்பாக்கியுடன் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள் எனவும், அவர் வெளியில் செல்லும் போது அந்த போலீசார் உடன் செல்வார்கள் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று இரவில் இருந்தே போலீஸ் பாதுகாப்பில் உள்ளது நடிகர் சூர்யா வீடு.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News