Kathir News
Begin typing your search above and press return to search.

"இங்கதான் இந்த அநியாயம் நடக்குது' - தி.மு.க அரசுக்கு எதிராக பொங்கிய மாநாடு தயாரிப்பாளர் !

இங்கதான் இந்த அநியாயம் நடக்குது - தி.மு.க அரசுக்கு எதிராக பொங்கிய மாநாடு தயாரிப்பாளர் !

Mohan RajBy : Mohan Raj

  |  22 Nov 2021 1:45 PM GMT

"எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?" என தமிழக அரசின் அறிவிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார் மாநாடு படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி.





வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள படம் 'மாநாடு', கொரோனா உள்ளிட்ட பல பிரச்னைகளை தாண்டி வளர்ந்து வந்த இந்தப்படம் நவம்பர் 25'ல் திரைக்கு வர உள்ளது. சுரேஷ் காமாட்சி இந்த படத்தை தயாரித்துள்ளார்.





இந்நிலையில் தமிழகத்தில் பொது இடங்களான தியேட்டர்கள், மார்க்கெட் உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் இருந்தால் மட்டுமே அனுமதி என்ற புதிய விதிமுறையை தமிழக சுகாதாரத் துறை அமல்படுத்தி உள்ளது, இதனால் திரையரங்கிற்குள் கொரோனோ தடுப்பூசி செலுத்தியவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். இந்நிலையில் இதற்கு சுரேஷ் காமாட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது, "உலகத்திலேயே திரையரங்கிற்கு செல்ல தடுப்பூசி கேட்பது இங்கு தான் முதல்முறை. அவனவன் சுதந்திரத்தில் தலையிடுவது எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்?? முன்பு போலவே திரையரங்கிற்குள் மக்களை அனுமதிக்க வேண்டும்'' என தெரிவித்துள்ளார்.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News