Kathir News
Begin typing your search above and press return to search.

மாநாடு கடைசி நிமிட பஞ்சாயத்து - நடந்தது என்ன?

மாநாடு கடைசி நிமிட பஞ்சாயத்து - நடந்தது என்ன?

Mohan RajBy : Mohan Raj

  |  25 Nov 2021 11:30 AM GMT

சிம்புவின் மாநாடு படம் கடைசி நேர சிக்கலில் இருந்து தப்பியது எப்படி என்ற தகவல் கிடைத்துள்ளது.





இயக்குனர் வெங்கட்பிரபுவின் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு, கல்யாணி, எஸ்.ஜே.சூர்யா நடித்துள்ள மாநாடு படம் இன்று வெளியாவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. நேற்று மாலை திடீரென ‛‛தவிர்க்க இயலாத காரணங்களால் மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவிக்கிறேன்'' என தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்தார், இதன் பின்னணி யில் என்ன நடந்தது என தயாரிப்பாளர் ஜே.சதீஷ் குமார் விவரித்துள்ளார்.





அவர் கூறியதாவது, "மாநாடு தயாரிப்பாளர், பைனான்சியர் உத்தம்சந்திற்கு பணம் தர வேண்டியிருந்ததால் கடைசிநேரத்தில் படவெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டது. சிம்பு, அவரது பெற்றோர் டி.ராஜேந்தர் - உஷா ஆகிய மூவரும் இந்த படத்திற்கு முழு பொறுப்பையும் ஏற்றுக் கொண்டனர். இவர்களுடன் நானும், தயாரிப்பாளர்கள் சிவா, சத்யஜோதி பிலிம்ஸ் தியாகராஜன் ஆகியோரும் தலையிட்டு பிரச்னையை தீர்த்து வைத்தோம். இந்த தருணத்தில் பைனான்சியர் உத்தம்சந்திற்கும் நன்றி சொல்லனும். அவரும் கறாராக நடக்காமல் நாங்கள் சொல்லியதை ஏற்றுக் கொண்டார். படம் வெளியாகி உள்ளது. அனைவருக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News