Kathir News
Begin typing your search above and press return to search.

என்னதான் பஞ்சாயத்து 'வாலி' ரீமேக்'கில்?

என்னதான் பஞ்சாயத்து வாலி ரீமேக்கில்?

Mohan RajBy : Mohan Raj

  |  30 Nov 2021 11:30 AM GMT

'வாலி' படத்தின் இந்தி ரீமேக் தயாரிப்பில் என்னதான் நடக்கிறது என விசாரித்து பார்த்ததில் முக்கிய தகவல்கள் கிடைத்தன.





இயக்குனர் எஸ்.ஜே.சூர்யா இயக்கத்தில் அஜித் மற்றும் சிம்ரன் நடிப்பில் கடந்த 1999-ம் ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிய படம் வாலி. இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்வதற்கான உரிமையை தயாரிப்பாளர் போனி கபூர் வாங்கி இருப்பதாகவும் ரீமேக் பணிகளை அடுத்த வருடம் தொடங்க இருப்பதாகவும் கூறப்பட்டது.





வாலி இந்தி ரீமேக்கை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா ஏற்கனவே கோர்ட்டில் தொடர்ந்த வழக்கு தள்ளுபடி ஆனது. இந்த நிலையில் படத்தின் டப்பிங் உரிமை தயாரிப்பாளருக்கு இருந்தாலும், வாலி திரைக்கதை தன்னுடையது என்பதால் வாலி இந்தி ரீமேக்கை எதிர்த்து எஸ்.ஜே.சூர்யா சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் வாலி இந்தி பதிப்பை துவங்கும் பணி மீண்டும் தாமதமாகலாம் என தெரிகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News