Kathir News
Begin typing your search above and press return to search.

விபத்தில் காப்பாற்றியவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறிய யாஷிகா ஆனந்த் !

விபத்தில் காப்பாற்றியவர்களை நேரில் சந்தித்து நன்றி கூறிய யாஷிகா ஆனந்த் !

Mohan RajBy : Mohan Raj

  |  11 Dec 2021 11:45 AM GMT

விபத்தில் காப்பாற்றியவர்களிடம் நேரில் சென்று நன்றி கூறிவிட்டு வந்துள்ளார் நடிகை யாஷிகா ஆனந்த்.





நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கிழக்கு கடற்கரை சாலை ரிசார்ட் ஒன்றி்ல் நடந்த விருந்தில் கலந்து கொண்டுவிட்டு நண்பர்களுடன் நள்ளிரவில் காரில் திரும்பும் போது ஏற்பட்ட விபத்தில் பலத்த காயமடைந்தார். உடன் பயணித்த அவரின் தோழி மரணமடைந்தார். இந்நிலையில் நான்கு மாதம் சிகிச்சை எடுத்துகொண்ட பிறகு யாஷிகா ஆனந்த் தற்பொழுது குணமடைந்துள்ளார்.





இந்த நிலையில் விபத்து நடந்த இடத்துக்கு சென்று அதனை யாஷிகா பார்வையிட்டார். அங்கு தன்னை காப்பாற்றி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு கண்ணீ்ர்மல்க நன்றி தெரிவித்தார். மேலும் "இது போன்ற நல்ல மனிதர்கள் உலகில் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கிறது" எனவும் தெரிவித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News