ப்ரித்விராஜ் நடித்த படத்தை தடை செய்த நீதிமன்றம் !
By : Mohan Raj
பிரித்விராஜ் நடித்த 'கடுவா' திரைப்படத்திற்கு இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இயக்குனர் ஷாஜி கைலாஷ் தற்போது மலையாளத்தில் 'கடுவா' என்ற படத்தை டைரக்டு செய்து வருகிறார். இதில் பிருதிவிராஜ் நாயகனாக நடிக்கிறார். கேரளாவில் உயர் போலீஸ் அதிகாரிக்கு எதிராக போராடிய 'கடுவாகுன்னேல் குருவச்சன்' என்பவரின் உண்மைக் கதையை மையமாக வைத்து கடுவா படம் தயாராவதாக படக்குழு தெரிவித்தது.
இந்நிலையில் கடுவா படத்துக்கு எதிராக கடுவாகுன்னேல் குருவச்சன் எர்ணாகுளம் இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அந்த வழக்கில் இந்த படத்தின் டிரெய்லர் எனது புகழுக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் இருக்கிறது. எனது கதாபாத்திரம் தவறாக சித்தரிக்கப்பட்டு உள்ளது. எனவே கடுவா படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியிருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி 'கடுவா' படத்துக்கு இடைக்கால தடை விதித்து தீர்ப்பு கூறினார்