Kathir News
Begin typing your search above and press return to search.

நல்ல படத்தோடு தமிழ்நாட்டுக்கு வர இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன் - அல்லு அர்ஜுன்

நல்ல படத்தோடு தமிழ்நாட்டுக்கு வர இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன் - அல்லு அர்ஜுன்

Mohan RajBy : Mohan Raj

  |  15 Dec 2021 9:15 AM GMT

'நல்ல படத்தோடு தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்பதற்காகவே இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன்" என அல்லு அர்ஜுன் புஷ்பா பட ப்ரமோஷன் நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.





இயக்குனர் சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன், பகத் ஃபாசில், ராஷ்மிகா மந்தனா நடித்துள்ள படம் புஷ்பா. இப்படம் இந்தியாவின் முக்கிய மொழிகளில் பான் இந்தியா படமாக வெளிவருகிறது. இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. அதில் கதாநாயகன் அல்லு அர்ஜுன் உட்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.





அப்போது அல்லு அர்ஜுன் பேசியதாவது, "தமிழ்நாட்டில் தான் பிறந்தேன். 20 வயது வரை தமிழ்நாட்டில் தான் வளர்ந்தேன். நல்ல படத்தோடு தமிழ்நாட்டுக்கு வரவேண்டும் என்பதற்காகவே இத்தனை ஆண்டுகளாக காத்திருந்தேன். நான் பேசும் தமிழ் தப்பாக இருந்தாலும், தமிழ் பேசுவது தான் அழகாக இருக்கும். புஷ்பா திரைப்படம் 4 படத்துக்கு சமம். இந்தப்படம் செம்மரக் கடத்தலின் பின்னணியில் நடக்கும் புஷ்பாவின் கதை, அவ்வளவு தான். இதில் அரசியல் எல்லாம் இல்லை" என கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News