"நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான்..! ஆனா.." - சூப்பர் ஸ்டார் கூறிய 'அண்ணாத்த' நினைவுகள்!
By : Mohan Raj
"நல்லவங்கள ஆண்டவன் சோதிப்பான்" என்ற சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பாட்ஷா பட புகழ் பெற்ற வசனத்தை மீண்டும் நினைவு கூர்ந்துள்ளார் ரஜினிகாந்த்.
இயக்குனர் சிவா இயக்கத்தில் 'அண்ணாத்த' படம் வெளியாகி இன்றுடன் 50 நாள் நிறைவடைகிறது, இதனை நினைவு கூறும் நோக்கில் இன்று ஹூட் செயலியில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தன் குரலின் மூலம் ரசிகர்களுக்கு செய்தி அனுப்பியுள்ளார்.
அதில் அவர் கூறியுள்ளதாவது, "ரசிகர்களுக்கு வணக்கம், 'அண்ணாத்த' படம் வெளியாகி இன்றுடன் 50 நாட்கள் நிறைவடைந்துள்ளது, படம் படம் வெளியாகி முதல் விமர்சகர்கள் சரியான விமர்சனம் தரவில்லை என்றாலும் மக்கள் திரையரங்கில் அளித்த ஆதரவு மிகப்பெரியது. இதன் படப்பிடிப்பில் கொரோனோ இடர்பாடுகளால் அவ்வபோது இடையூறுகள் ஏற்பட்டன என நினைவு கூர்ந்தார். மேலும் தொடர்ந்த அவர் அந்த இடையூறு அனைத்தும் ஆண்டவன் அருளால் சரியானது. படம் வெளியாகிய போது 3 நாள் கழித்து பெரும் மழை அதேசமயம் படம் வெளியான அன்று மழை இல்லை இதுவும் ஆண்டவன் சித்தமே என கூறினார். பல நினைவுகளை நினைவுகூர்ந்து இறுதியாக "நல்லவங்களை ஆண்டவன் சோதிப்பான் ஆனா கைவிட மாட்டான்" என தன் பாட்ஷா பட வசனத்தை நினைவுகூர்ந்தார்.