Begin typing your search above and press return to search.
'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்' படப்பிடிப்பு மீண்டும் எப்போது?

By :
இன்னும் மூன்று வாரம் கழித்து 'நாய் சேகர்' படப்பிடிப்பு மீண்டும் துவங்கும் என படக்குழு அறிவித்துள்ளது.
லைகா நிறுவனம் தயாரிக்க இயக்குனர் சுராஜ் இயக்கத்தில் வடிவேலு நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிக்கும் படம் 'நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்'. லண்டனில் நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பு முதல் ஷெட்யூல் முடிந்து வந்த பிறகு நடிகர் வடிவேலு மற்றும் இயக்குனர் சுராஜ் அவர்களுக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டது. இதனால் மீண்டும் படப்பிடிப்பு துவங்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
இதனையடுத்து படக்குழுவினர் அறிவித்துள்ளதாவது, இரண்டாவது ஷெட்யூல் துவங்க மூன்று வார கால அவகாசம் உள்ளது எனவும் அதற்குள் வடிவேலு, சுராஜ் ஆகியோர் குணமடைந்துவிடுவர் எனவும் தெரிவித்துள்ளனர்.
Next Story