புதிய படத்தின் படப்பிடிப்பை பூஜையுடன் துவங்கியது ஜீத்து ஜோசப்

பிரபல மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப் அடுத்த படத்தை இன்று பூஜையுடன் துவக்கியுள்ளார்.
மோகன்லாலை வைத்து திரிஷ்யம், திரிஷ்யம் 2 என இரண்டு படங்களின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் மலையாள இயக்குனர் ஜீத்து ஜோசப். மீண்டும் மோகன்லாலை வைத்து 'ட்வெல்த் மேன்' என்ற படத்தை இயக்கி முடித்து வெளியீட்டுக்கு தயாராக வைத்து உள்ளார். இந்நிலையில் அடுத்தபடியாக எந்த படம் இயக்குவார் என ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வந்தது.
இப்படி எதிர்பார்ப்புகளுக்கு பதில் அளிக்கும் வகையில் இயக்குனர் ஜீத்து ஜோசப் தற்போது ஒரு படத்தை பூஜையுடன் துவைக்கி உள்ளார். மலையாள இளம் நடிகர் ஆசிப் அலி என்பவரை ஹீரோவாக வைத்து என்கின்ற படத்தை இயக்குகிறார், "கூமன்" என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படம் ஆக்ஷன் திரில்லர் படமாக உருவாகவுள்ளது, இப்படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் பூஜையுடன் துவங்கியுள்ளது.