Begin typing your search above and press return to search.
பாலியல் புகாரில் சிக்கிய இயக்குனர் - கைது செய்த போலீசார்

By :
அருவி படத்தின் மூலம் புகழ் வெளிச்சத்துக்கு வந்த அதிதி பாலனின் பட இயக்குனர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
அருவி படத்தில் தமிழில் அறிமுகமானவர் நடிகை 'அதிதி பாலன்', இவர் தற்பொழுது மலையாள நடிகர் நிவின் பாலியுடன் லிஜு கிருஷ்ணா என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முக்கால்வாசி முடிந்துவிட்டது.
இந்நிலையில் இந்த படத்தின் இயக்குனர் லிஜு கிருஷ்ணா மீது படக்குழுவை சேர்ந்த பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ளார், இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். இந்த எதிர்பாராத நடவடிக்கையால் ஸ்தம்பித்த படக்குழுவினர் படப்பிடிப்பை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளனர்.
Next Story