மனைவியுடன் ராம்சரண் பின்லாந்தில் ஜாலிட்ரிப்
By : Mohan Raj
ஆர்.ஆர்.ஆர், ஆச்சாரியா என இரு படங்கள் நிறைவடைந்த நிலையில் குடும்பத்துடன் பின்லாந்து நாட்டிற்கு ஜாலி ட்ரிப் அடிக்க சென்றுள்ளார் ராம்சரண்.
இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்த ஆர்.ஆர்.ஆர் வெளியீடு அடுத்த மாதம் திட்டமிடப்பட்டுள்ளது, இந்நிலையில் தனது தந்தை சிரஞ்சீவியுடன் ஆச்சார்யா படத்திலும் நடித்து முடித்துள்ளார். இந்த இரு படங்களும் வெளியாக இருக்கும் நிலையில் அடுத்தபடியாக இயக்குனர் ஷங்கர் இயக்கும் படத்தில் நடிக்க உள்ளார் அப்படத்தின் படப்பிடிப்பிற்கு தற்காலிகமாக இடைவெளி விடப்பட்டுள்ளது.
இந்த இடைவெளியை குடும்பத்துடன் செலவிட நினைத்த ராம் சரண் தற்போது மனைவி உபாசனாயும் அழைத்து பின்லாந்து நாட்டிற்கு சென்றுள்ளார், தற்பொழுது பின்லாந்து நாட்டில் தனது மனைவியுடன் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார் ராம்சரண், சமூக வலைதளங்களில் இப்படங்கள் அதிகம் வைரல் ஆகின்றன.