Begin typing your search above and press return to search.
சஞ்சய் லீலா பான்சாலியை சந்தித்த அல்லு அர்ஜுன் - அடுத்த பான் இந்தியா படமா?

By :
பிரபல பாலிவுட் இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை சந்தித்துள்ளார் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜுன்.
பாலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான சஞ்சய் லீலா பன்சாலி இயக்கிய 'கங்குபாய் கத்தியவாடி' படம் மிகப்பெரிய வெற்றி பெற்று அதன் வசூல் 100 கோடியை தாண்டியது, இந்நிலையில் தென்னிந்தியாவில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 'புஷ்பா' படத்தின் கதாநாயகன் அல்லு அர்ஜுன் முதன்முறையாக இந்தியிலும் தனது தடத்தை பதித்துள்ளார். தற்பொழுது அவர் இயக்குனர் சஞ்சய் லீலா பான்சாலியை சந்தித்து பேசியுள்ளார்.
'புஷ்பா' படம் மிகப் பெரும் வெற்றி அடைந்ததை அடுத்து மீண்டும் இந்திய அளவில் ஒரு படம் செய்ய அவர் சஞ்சய் லீலா பான்சாலியை அணுகியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Next Story