நயன்தாரா-விக்னேஷ் சிவனை கைது செய்ய போலீசில் புகார் - சென்னையில் பரபரப்பு
By : Mohan Raj
இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவை கைது செய்யுங்கள் என போலீஸ் கமிஷனரகத்தில் புகார் அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை சாலிகிராமத்தை சேர்ந்தவர் கண்ணன், சமூக ஆர்வலர். இவர் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், "அஜித் நடிப்பில் விக்னேஷ் சிவன் அஜித் 62 என்ற படத்தை இயக்க இருப்பதாக சமூகவலைதளத்தில் தகவல் பரவி வருகிறது. ஆனால் சமூக பொறுப்பு இன்றி இயக்குனர் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் ரவுடிகளை ஊக்கப்படுத்தும் விதமாக 'ரவுடி பிக்சர்ஸ்' என்ற பட தயாரிப்பு நிறுவனம் துவக்கியிருப்பது பொது மக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. ரவுடி பிக்சர்ஸ் படத்தை இயக்கிய படத்தயாரிப்பு நிறுவனத்தை தடை செய்ய வேண்டும். விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாராவை கைது செய்ய வேண்டும், இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்" என புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் சிலர் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளதாக தெரிகிறது. இந்நிலையில் இந்த புகாரின் அடிப்படையில் எந்த விதமான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வருகிறது.