எஸ்.பி.பி சரண் பார்த்துப்பார்த்து வடிவமைக்கும் எஸ்.பி.பி நினைவாலயம்

6 டன் எடையுள்ள பாறையில் மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் அவர்களின் முகத்தை சிற்பி ஒருவர் வடிவமைத்து அவரது நினைவு இல்லத்திற்கு அனுப்பி உள்ளார்.
பிரபல பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் கடந்த 2020ஆம் ஆண்டு கொரோனா தொற்று காரணமாக காலமானார், அப்பொழுது அவருக்கு வயது 74. உலகெங்கும் இசை ரசிகர்கள் பலரும் அவர் குரலுக்கு அடிமை, இந்நிலையில் அவரது உடல் காஞ்சிபுரம் திருவிழா தாமரைப்பாக்கம் சர்வேஸ்வரா நகரில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அவரது பண்ணை வீட்டில் எஸ்.பி.பி அவர்களுக்கு நினைவு இல்லத்தை அவரது மகன் எஸ்.பி.சரண் அமைத்து உருவாக்கி வருகிறார். ஓராண்டாக நடக்கும் இப்பணி அங்கு நிறைவடைய உள்ளது.
மேலும் அங்கு 6 டன் எடை கொண்ட பாறையை குடைந்து அதில் எஸ்.பி.பி முகம் மற்றும் அவரது கையெழுத்து அவர் அடிக்கடி உச்சரிக்கும் மந்திரம் ஆகியவற்றை வடிவமைத்து உள்ளனர் சிற்பி கருணாகரன் குமார் இதற்காக அவர் தலைமையில் ஆறு சிற்பிகள் இதனை வடிவமைத்துள்ளனர். விரைவில் இதன் பணிகள் முடிவடைந்து ரசிகர்களுக்காக திறக்கப்பட உள்ளது.