தமிழ் சினிமாவில் இப்போது கதைக்குப் பஞ்சம் - வெங்கட்பிரபு ஏன் இப்படி கூறினார்?
By : Mohan Raj
தற்போதெல்லாம் தமிழ் சினிமாவில் கதைக்குப் பஞ்சம் ஏற்படுகிறது என பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு தெரிவித்துள்ளார்.
'மாநாடு' படத்தின் வெற்றிக்குப் பிறகு 'மன்மதலீலை' என்ற படத்தை தற்போது இயக்கி வருகிறார் வெங்கட் பிரபு. இந்நிலையில் தனியார் பத்திரிக்கை ஒன்றுக்கு வெங்கட்பிரபு அளித்த பேட்டியில் கூறியதாவது, "நான் கதைக்குதான் முக்கியம் தருவேன் பட்ஜெட், நாயகன் எல்லாம் இரண்டாம்பட்சம்தான். அஜித், கார்த்தி, சூர்யா, சிம்பு என யாரை இயக்கினாலும் அவர்கள் வித்தியாசமாகவே காட்டினேன். அவர்கள் செய்யாத பாத்திரம் தரும்போது அவர்களுக்கும் ஒரு உற்சாகம் வரும் அஜித்தை மங்காத்தாவில் வில்லனாக மாற்றியது போல் நமக்கு சவாலாக இருக்கும், ரசிகர்களுக்கும் இன்ப அதிர்ச்சி கிடைக்கும்" என்றார்.
மேலும் பேசிய அவர், "இப்போதெல்லாம் நல்ல எழுத்தாளர்கள் இயக்குனர்கள் ஆகிவிட ஆசைப்படுகிறார்கள். முன்னடி பாரதிராஜா, கே.பி சார் எல்லாரும் எழுத்தாளர்களாக இருந்தனர். இன்று எல்லாரும் எல்லாமே ஒருவரே செய்வதால் நல்ல கதைகளுக்கு பஞ்சம் ஆகிவிடுகிறது" என்றார்.