Kathir News
Begin typing your search above and press return to search.

நீதிமன்றத்தையும், காவல்துறையையும் மட்டுமே நம்பி இருக்கிறேன் வேதனையுடன் கூறிய நடிகர் சூரி

நீதிமன்றத்தையும், காவல்துறையையும் மட்டுமே நம்பி இருக்கிறேன் வேதனையுடன் கூறிய நடிகர் சூரி
X

Mohan RajBy : Mohan Raj

  |  30 March 2022 6:37 PM IST

நீதிமன்றத்தையும் காவல்துறையை மட்டுமே நம்பி இருக்கிறேன் என நடிகர் விஷாலின் தந்தை தன்னிடம் மோசடி செய்தது தொடர்பான வழக்கு குறித்த விவகாரத்தில் கருத்து தெரிவித்துள்ளார் நடிகர் சூரி.




சென்னையை அடுத்த சிறுசேரியில் தனக்கு நிலம் வாங்கி தருவதாக கூறி பண மோசடி செய்து விட்டதாக முன்னாள் டி.ஜி.பி ரமேஷ் குடவாலா மற்றும் தயாரிப்பாளர் அன்புவேல் ராஜன் மீது சென்னை உயர்நீதிமன்றத்தில் நடிகர் சூரி வழக்கு தொடர்ந்திருந்தார். தற்போது இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வருகிறது மேலும் இந்த வழக்கு விசாரணைக்காக நேற்று சென்னை மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் மீனா முன்னிலையில் ஆஜராகி இருந்தார் சூரி.




அப்பொழுது செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, "இது இந்த வழக்கு விசாரணைக்கு நிச்சயமாக எனக்கு நியாயம் கிடைக்கும் நீதிமன்றத்தையும், காவல்துறையை மட்டுமே நம்பியிருக்கிறேன். கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. கட்டாயமாக தப்பு செய்தவர்கள் இந்த வழக்கில் இருந்து தப்பிக்கவே முடியாது" என தெரிவித்துள்ளார். டிஜிபி ரமேஷ் குடவாலா என்பவர் நடிகர் விஷ்ணு விஷாலின் தந்தை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News