Kathir News
Begin typing your search above and press return to search.

ராஜமௌலி மீது கோபமா? விளக்கமளித்த ஆலியாபட்!

ராஜமௌலி மீது கோபமா? விளக்கமளித்த ஆலியாபட்!

Mohan RajBy : Mohan Raj

  |  1 April 2022 7:18 AM GMT

ஆர்.ஆர்.ஆர் படக்குழுவின் மீது ஆலியாபட் மனவருத்தத்தில் இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் அது பற்றி மனம் திறந்து பேசியுள்ளார் நடிகை ஆலியா பட்.




இயக்குனர் ராஜமௌலி இயக்கத்தில் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண், ஆலியா பட் நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்றுள்ள படம் ஆர்.ஆர்.ஆர், இப்படத்தில் அலியாபட் கதாபாத்திரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வடிவமைக்கப்பட்டுள்ளதாக மிகுந்த வருத்தத்தில் ஆலியாபட் உள்ளார் எனவும் இயக்குனர் ராஜமௌலியை சமூக வலைத்தளத்தில் அவர் பின் தொடர்வதை நிறுத்தி விட்டார் எனவும் தகவல்கள் வெளியாகின.




இந்நிலையில் இந்த சர்ச்சை குறித்து முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஆலியா பட்டின் நெருங்கிய நண்பர் ஒருவர் ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியதாவது, "ஆலியா ராஜமௌலி மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறார். படக்குழுவுடன் சக நடிகர்களுடன் படப்பிடிப்பின்போது நெருங்கிய நட்பில் இருந்த ஆலியா எந்த படத்திலும் படப்பிடிப்பு பிறகு தலையிடுவதில்லை. இயக்குனர்களின் முடிவுக்கு மதிப்பளிப்பார்" என கூறியுள்ளார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக ஆலியா பட் கூறியுள்ளதாவது, "ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினர் மீது ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் நான் திரைப்படம் குறித்தான பதிவுகளை நீக்கி விட்டேன் என்பது செய்தியாக பரவியதை அறிந்தேன், உண்மையை அறியாமல் இது பற்றி வதந்திகளை பரப்ப வேண்டாம். நான் எனது இன்ஸ்டா பக்கம் அதிக பதிவுகளை கொண்டிருப்பதால் பழைய வீடியோ பதிவுகளை மாற்றி அமைப்பது எப்பொழுதுமே வழக்கமானது" என விளக்கமளித்துள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News