Kathir News
Begin typing your search above and press return to search.

கே.ஜி.எஃப் அதிரிபுதிரி ஹிட் - இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்த பிரசாந்த் நீல்

கே.ஜி.எஃப் அதிரிபுதிரி ஹிட் - இந்தியாவின் மோஸ்ட் வான்டட் இயக்குனராக உயர்ந்த பிரசாந்த் நீல்

Mohan RajBy : Mohan Raj

  |  16 April 2022 7:15 AM GMT

'கே.ஜி.எப் 2' படத்தின் மிகப்பெரிய வெற்றியை அடுத்து இந்திய திரையுலகில் முக்கியமான இயக்குனர்கள் வரிசையில் பிரசாந்த் நீல் இடம் பிடித்துவிட்டார்.




கே.ஜி.எஃப் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து உருவான 'கே.ஜி.எப்' இரண்டாம் பாகம் இரு தினங்களுக்கு முன் வெளியானது, பான்-இந்தியா படமாக வெளியான இப்படம் வெளியான அனைத்து மொழிகளிலும் மிகப் பெரும் வெற்றி அடைந்துள்ளது. படத்தின் வெற்றி காரணமாக இப்படத்தின் இயக்குனர் பிரசாந்த் நீல் அவர்கள் தற்போது இந்தியாவின் மிக முக்கிய இயக்குனர்களில் ஒருவர் என்ற அந்தஸ்தை பிடித்து விட்டார்



இந்தியாவில் பல முக்கியமான இயக்குனர்கள் இருந்தாலும் தென்னிந்தியாவிலிருந்து இயக்குனர் ஷங்கர், ராஜமௌலி என்ற இருவரைதான் இதுவரை இந்தியாவின் மிக முக்கியமான இயக்குனர்கள் என்ற அந்தஸ்தை பெற்றிருந்தனர். தற்போது அந்த வரிசையில் இயக்குனர் பிரசாந்த் நீல் இணைந்து விட்டார், தென்னிந்திய திரை கதாநாயகர்கள் மட்டுமில்லாமல் தற்போது பாலிவுட் கதாநாயகர்களும் தங்களுக்கு என ஒரு கதையை தயார் செய்ய பிரசாந்த் நீல்'அவர்களை அணுகுகிறார்கள் இந்நிலையில் அடுத்தபடியாக பிரசாந்த் நீல் பிரபாஸை கதாநாயகனாக வைத்து 'சலார்'என்ற முழு நீள ஆக்ஷன் படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News