Kathir News
Begin typing your search above and press return to search.

"குடித்துவிட்டு கதை எழுதுவேன்" அதிர்ச்சியடைய வைத்த கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல்

குடித்துவிட்டு கதை எழுதுவேன் அதிர்ச்சியடைய வைத்த கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல்

Mohan RajBy : Mohan Raj

  |  17 April 2022 8:45 AM GMT

'குடித்துவிட்டு தான் கதை எழுதுவேன்' என கே.ஜி.எஃப் இயக்குனர் பிரசாந்த் நீல் கூறியிருப்பது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.




'கே.ஜி.எஃப்' இரண்டு பாகங்களும் வெளிவந்த பின்னர் இந்தியாவின் குறிப்பிடத்தக்க மற்றும் அனைவரும் விரும்பும் இயக்குனராக மாறியுள்ளார் இயக்குனர் பிரசாந்த் நீல். இவர் 'கே.ஜி.எஃப்' படத்தின் சம்பந்தப்பட்ட தகவல்களை பேட்டிகளின் மூலம் கூறிவந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில், எப்படி கதை எழுதுவீர்கள் என கேட்டபோது 'குடித்த பின்தான் கதைகள் எழுதுவேன், மறுநாள் நிதானமாக இருக்கும் பொழுது முன்தினம் போதையில் எழுதிய கதையை படித்துப் பார்த்து அப்போது அவை எனக்கு சிறந்ததாக தெரிந்தால் உடனே அதற்குரிய திரைக்கதை எழுதுவேன்' என கூறியுள்ளார்.



ஒரு இயக்குனர் இப்படிக் கூறுவது பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது, மேலும் இதனால் குடித்தால் சிறந்த கதைகள் தோன்றும் என்ற எண்ணம் திரை உலகத்திற்கு வரும் இளைஞர்களையும் தவறான பாதையில் எடுத்துச் சென்று விடுமோ என பலரையும் அச்சப்பட வைத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News