Kathir News
Begin typing your search above and press return to search.

பாலச்சந்தரின் இரு அறிமுகமும் ஆஸ்கர் விருதை தட்டிய ரகசியம்!

பாலச்சந்தரின் இரு அறிமுகமும் ஆஸ்கர் விருதை தட்டிய ரகசியம்!

Mohan RajBy : Mohan Raj

  |  13 March 2023 6:41 PM GMT

பாலச்சந்தரின் அறிமுகங்கள் சோடை போகுமா என்பது போன்று ஏ.ஆர்.ரகுமான், கீரவாணி என இருவர் தான் தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகி வருகின்றனர்.

நடந்து முடிந்த ஆஸ்கர் வெளியீட்டு விழாவில் இந்திய சினிமாவின் சார்பில் சிறந்த ஒரிஜினல் பாடல் என்ற பிரிவில் ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற 'நாட்டுக்கூத்து' பாடல் ஆஸ்கர் விருதை வென்றது. இந்த படத்தின் இசையமைப்பாளர் தமிழில் மரகதமணி இயக்குனர் பாலச்சந்தர் அவர்களால் 'வானமே எல்லை' படத்தில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்டார்.

இதனை குறிப்பிட்டு சினிமா ரசிகர்கள் இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அதாவது பாலச்சந்தர் ஒரே ஆண்டில் அறிமுகப்படுத்தியது இரு இசையமைப்பாளர்களை ஒருவர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்கனவே ஆஸ்கர் விருது வாங்கிவிட்டார். இன்னொருவர் மரகதமணி அவர் இப்பொழுது ஆஸ்கர் விருதை வாங்கி உள்ளார். எனவே பாலச்சந்திரன் படைப்புகள் என்றும் சோடை போகாது என குறிப்பிட்டு இணையத்தில் கொண்டாடி வருகிறார்கள் சினிமா ரசிகர்கள்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News