Kathir News
Begin typing your search above and press return to search.

முடிவுக்கு வந்த 'அயோத்தி' பட கதை பிரச்சினை!

முடிவுக்கு வந்த அயோத்தி பட கதை பிரச்சினை!

Mohan RajBy : Mohan Raj

  |  17 March 2023 1:23 AM GMT

அயோத்தி கதை பிரச்சனை சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளது.

சசிகுமார் நடிப்பில், மந்திரமூர்த்தி இயக்கத்தில் சமீபத்தில் வெளியான படம் 'அயோத்தி', வடநாட்டில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வரும் குடும்பத்தினர் வந்த இடத்தில் தங்களது குடும்பத் தலைவியை பறி கொடுத்துவிட்டு அவரது உடலுடன் ஊர் திரும்ப அவதிப்படுவதும், நாயகன் சசிகுமார் பல இன்னல்களை சந்திப்பதும் என படத்தின் கதை அமைந்திருந்தது.

இப்படம் பெரிய வரவேற்பையும் பெற்றது, இப்படத்தின் கதை எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் எழுதி இருந்தார். மேலும் இப்படத்தின் கதை தன்னுடையது தான் வலை பக்கத்தில், முகநூல் பக்கத்தில் எழுதியதை அப்படியே தழுவி எடுக்கப்பட்டுள்ளதாக மாதவராஜ் என்பவர் புகார் அளித்திருந்தார். இது குறித்து எஸ்.ராமகிருஷ்ணன் தரப்பிலிருந்து பதில் வராவிட்டால் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் இந்த விஷயத்தை பெரிசாகவில்லை. மேலும் இந்த நிலையில் படம் ஓடிடியில் வெளியாகும் பொழுது இது எழுதிய மாதவராஜ் பெயர் போடப்படும் என அங்கீகாரம் தருவதாக உத்திரவாதம் கொடுத்த காரணத்தினால் இப்படத்தின் பிரச்சினை சுமூகமாக முடிவுக்கு வந்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News