சிவகார்த்திகேயனுக்கு 4 கோடி ரூபாய் சம்பள பாக்கி வைத்த ஞானவேல்ராஜா

4 கோடி ரூபாய் சம்பள பாக்கி வைத்துள்ளதாக தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா மீது நடிகர் சிவகார்த்திகேயன் வழக்கு தொடர்ந்துள்ளார்.
தமிழ் சினிமாவின் இளம் கதாநாயகன் சிவகார்த்திகேயன் தற்போது வேகமாக வளர்ந்து வருகிறார், தற்போது தமிழ்,தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் நடித்து வருகிறார். இவர் கடந்த 2019 தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா தயாரிப்பில் ராஜேஷ்.எம் இயக்கத்தில் மிஸ்டர்.லோக்கல் படத்தில் நடித்தார். இந்த படத்திற்காக 15 கோடி சம்பளம் பேசப்பட்டதாகவும் 11 கோடி மட்டும் கொடுத்துவிட்டு 4 கோடியை தரவில்லை எனவும் புகார் கூறியுள்ளார்.
4 கோடி ரூபா சம்பள பாக்கியை செலுத்தும் வரையில் ஞானவேல்ராஜா தயாரிக்கும் படங்களில் அவர் முதலீடு செய்ய தடை விதிக்க வேண்டும் எனவும் ஞானவேல்ராஜாவின் படங்களுக்கான தியேட்டர், ஓ.டி.டி வெளியீடு உரிமைகளை உறுதி செய்யவும் தடை தேவை என சிவகார்த்திகேயன் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் இந்த வழக்கு விசாரணைக்கு வருகிறது.