Kathir News
Begin typing your search above and press return to search.

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக 4-மணிநேர நவராத்திரி கொண்டாட்டம்..!

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக 4-மணிநேர நவராத்திரி கொண்டாட்டம்..!

பிக்பாஸ் வரலாற்றில் முதல் முறையாக 4-மணிநேர நவராத்திரி கொண்டாட்டம்..!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  26 Oct 2020 5:40 PM GMT

பிக்பாஸ் சீசன் 4 கோலகலமாக ஆரம்பிக்கப்பட்டு பல வாரங்களை கடந்து உள்ளனர். அந்தவகையில் நேற்றைய தினம் யார் வெளியே செல்வார் என்கிற பரபரப்பு இருந்தது அதில் ஆஜித் மிக குறைவான வாக்குகளுடன் எவிக்ஷன் செய்யப்பட்டார். வெளியே செல்லாமல் இருப்பதற்கான மறுப்பு கார்டு வைத்திருந்தனால் அவர் காப்பாற்றப்பட்டார்.


எனவே மற்ற போட்டியாளர்களுக்கு இருந்ததை விட, ஆஜித்துக்கு இருந்த கூடுதல் பவர் நேற்றுடன் முடிவுக்கு வந்து விட்டது. இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியாளர்கள், 'நவராத்திரியை' சிறப்புக்கும் விதமாக இதுவரை இல்லாத புதிய டாஸ்க் ஒன்றை போட்டியாளர்களுக்கு கொடுத்துள்ளனர்.

அதனால் இன்று 6:30 மணி முதல் 9:30 மணிவரை பிக்பாஸ் நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் என்று ப்ரோமோவில் வந்தது. இதுபோல் சீசன் 1, சீசன் 2 சீசன் 3 ஆகிய எபிசோடுகளில் இதுபோல் எந்த நாட்களிலும் 4 மணி நேரம் தொடர்ந்து நடைபெற்றது இல்லை.

இன்றைய பிக்பாஸ் நிகழ்ச்சியில் என்ன நிகழ்ச்சிகள் விளையாட்டுக்கள் இடம்பெறும் என புரோமோவில் அமைந்தவை:போட்டியாளர்களுக்கு வித்தியாசமான விளையாட்டுடன், நவராத்திரி பூஜை, கொலு, விதவிதமான உணவு வகைகள் என அசத்துகிறார்கள் போட்டியாளர்கள் மேலும் அனிதா செய்தி வாசிப்பது போல் கூறினார். இதில் குறுக்கிட்ட ரியோ 4 மணி நேரம் இடைவெளி இன்றி கொண்டாட்டம் என தவறை திருத்த அதற்கு சாரி என்று கூறி அனிதா செய்தி வாசிப்பை தொடர்வது போல ப்ரோமோ முடிந்தது. இதை அறிந்த பிக்பாஸ் ரசிகர்கள் தொடர்ந்து நான்கு மணி நேரமா என்று உற்சாகத்தில் இருக்கின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News