Kathir News
Begin typing your search above and press return to search.

5 வருடங்களுக்கு பிறகு புதிய படத்தை இயக்கவிருக்கும் அல்போன்ஸ் புத்திரன்

5 வருடங்களுக்கு பிறகு புதிய படத்தை இயக்கவிருக்கும் அல்போன்ஸ் புத்திரன்

Mohan RajBy : Mohan Raj

  |  6 Dec 2021 2:15 AM GMT

மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் அடுத்தபடியாக நடிக்கவிருக்கிறார் நயன்தாரா.





பிரேமம் என்ற மிகப்பெரிய வெற்றிபடத்தின் மூலம் கவனம் ஈர்த்தவர் அல்போன்ஸ் புத்திரன், கடந்த 5 ஆண்டுகளாக இவரின் புதிய படம் பற்றிய அறிவிப்பு ஏதுவும் வெளியாகாமல் இருந்தது. இந்தநிலையில், பிரித்விராஜ், நயன்தாராவை இணைத்து 'கோல்டு' என்கிற படத்தை இயக்கி முடித்துள்ள அல்போன்ஸ் புத்ரன், தற்போது அந்த படம் குறித்த செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.




அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, "இந்த படம் நேரமும் பிரேமமும் போல இல்லை. இது வேற மாதிரி படம். வழக்கம் போல ஒரு எச்சரிக்கை! போரையும் பாசத்தையும் எதிர்பார்த்து யாரும் அந்த பக்கம் வரக்கூடாது" என கூறியுள்ளார் அல்போன்ஸ் புத்ரன்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News