சாய் பல்லவி'யின் புதிய படத்தை தடை விதிக்க காவல் துறையிடம் புகார்
'விராட பருவம்' படத்தை அனுமதித்தது தவறு என சென்சார் அதிகாரிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
By : Mohan Raj
'விராட பருவம்' படத்தை அனுமதித்தது தவறு என சென்சார் அதிகாரிகள் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் ராணா, சாய்பல்லவி நடிப்பில் 'விராட பருவம்' என்கிற படம் வெளியானது. நக்சலைட் பின்னணியில் உருவாகியுள்ள இந்த படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் சாய்பல்லவி நடித்துள்ளார். இந்த படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் சாய்பல்லவி மத உணர்வுகள் குறித்து பேசிய வார்த்தைகள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் இந்த படத்தை திரையிட அனுமதித்தது தவறு என இந்தப் படத்தை மேலும் திரையிட தடை விதிக்க வேண்டும் என சென்சார் அதிகாரிகள் மீது ஒருவர் போலீசில் புகார் அளித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த சிவக்குமார் என்பவர் சுல்தான் பஜார் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில் இந்தப் படம் நக்சலைட்டுகளை ஆதரிக்கும் விதமாக உருவாகியுள்ளது, மேலும் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை இந்த படத்தில் காட்டி இருப்பது மிகப்பெரிய தவறு. இந்த படத்தின் கதை இளைஞர்களை நக்ஸல்களை ஆதரிக்கும் விதமாக உருவாகியுள்ளது, இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் அனுமதித்தது தவறு, எனவே இந்த படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.