Kathir News
Begin typing your search above and press return to search.

பொன்னியின் செல்வன் ஆதித்ய கரிகாலன் நெற்றியில் எங்கே திருநீறு? - மணிரத்னத்திற்கு பறந்த நோட்டீஸ்

வரலாற்று உண்மையை மறைத்ததற்காக பொன்னியின் செல்வன் படத்தை தடை விதிக்க வேண்டுமென ஒருவர் நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

பொன்னியின் செல்வன் ஆதித்ய கரிகாலன் நெற்றியில் எங்கே திருநீறு? - மணிரத்னத்திற்கு பறந்த நோட்டீஸ்

Mohan RajBy : Mohan Raj

  |  18 July 2022 12:22 PM GMT

வரலாற்று உண்மையை மறைத்ததற்காக பொன்னியின் செல்வன் படத்தை தடை விதிக்க வேண்டுமென ஒருவர் நோட்டீஸ் அனுப்பியது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.




கல்கியின் புகழ்பெற்ற பொன்னியின் செல்வன் புதினத்தை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கி உள்ள திரைப்படம் 'பொன்னியின் செல்வன்', 2 பாகங்களாக உருவாகும் இந்த படம் வரும் செப்டம்பர் மாதம் 30ஆம் தேதி வெளியாகவிருக்கிறது.




இந்நிலையில் சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த செல்வம் என்பவர் அனுப்பி உள்ள நோட்டீஸில் சோழர்களின் வம்சத்தில் நெற்றியில் நாமம் இடும் பழக்கம் இல்லாத நிலையில் பொன்னின் செல்வன் படத்தில் ஆதித்ய கரிகாலன் கதாபாத்திரத்தில் இடம்பெற்றுள்ள விக்ரம் நெற்றியில் நாம இட்டுள்ளது போன்ற காட்சி அமைப்பு தவறானது என்றும், இயக்குனர் மணிரத்னம் வரலாற்றை மறைத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

மேலும் படத்தை வெளியிடும் முன்பு எங்களுக்காக திரையிட்ட காட்ட வேண்டும் என தனது நோட்டீஸில் குறிப்பிட்டுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News