'வாரிசு' படப்பிடிப்பு தளத்தில் பிறப்பிக்கப்பட்ட திடீர் உத்தரவு
விஜயின் வாரிசு பட குழு தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
By : Mohan Raj
விஜயின் வாரிசு பட குழு தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் விஜய், ரஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ்ராஜ், யோகி பாபு, குஷ்பூ உள்ளிட்ட பலர் நடித்து வரும் படம் 'வாரிசு' தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகி வரும் இப்படம் வரும் பொங்கல் தினத்தில் வெளிவர இருக்கிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஹைதராபாத்தில் துவங்கி தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது.
இந்திரலையில் வாரிசு பணத்தின் இயக்குனர் படப்பிடிப்பு தளத்திற்கு வரும் யாரும் இனிமேல் செல்போன் கொண்டு வருவதற்கு அனுமதி இல்லை என ஒரு அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார் இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி, 'வாரிசு' படம் திரைக்கு வருவது வரை எந்த ஒரு புகைப்படங்களும், வீடியோக்களும் வெளியில் கசிய கூடாது என்பதற்காக இந்த அதிரடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விளக்கம் அளித்துள்ளார்.