'பொன்னியின் செல்வன்' விழா தஞ்சையில் கிடையாதா? கைவிடப்பட்ட காரணம் என்ன?
பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை தஞ்சாவூரில் வெளியிடும் திட்டம் கைவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
By : Mohan Raj
பொன்னியின் செல்வன் படத்தின் டீசரை தஞ்சாவூரில் வெளியிடும் திட்டம் கைவிடப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், சரத்குமார், பார்த்திபன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகவிருக்கும் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் டீசரை தஞ்சாவூரில் வெளியிடுவதாக படக்குழு முடிவு செய்திருந்தது. வரும் ஜூலை 7ம் தேதியும் நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தஞ்சாவூரில் நடைபெறவிருந்த நிகழ்ச்சி கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது, இதற்கு காரணமாக படத்தின் டீசர் கிராபிக்ஸ் வேலையில் மிச்சம் இருப்பதாலும் அதனால் தள்ளிப் போவதற்கு வாய்ப்பு இருப்பதால் குறிப்பிட்ட தேதியில் விழா நடத்த முடியாமல் போகலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னையில் இருக்கும் எனவும் இடம், தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.