Kathir News
Begin typing your search above and press return to search.

ஜனாதிபதியும், பிரதமர் மோடியையும் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றதில் மகிழ்ச்சி- நடிகர் ரஜினிகாந்த்!

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இவருக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் மாநில முதலமைச்சர்கள், சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஜனாதிபதியும், பிரதமர் மோடியையும் சந்தித்து வாழ்த்துக்களை பெற்றதில் மகிழ்ச்சி- நடிகர் ரஜினிகாந்த்!

ThangaveluBy : Thangavelu

  |  27 Oct 2021 11:20 AM GMT

நடிகர் ரஜினிகாந்துக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டது. இவருக்கு பிரதமர் மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் மாநில முதலமைச்சர்கள், சினிமாத்துறையை சேர்ந்தவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்தனர்.



இதனிடையே விருது வழங்கப்பட்ட பின்னர் பிரதமர் மோடி மற்றும் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை நடிகர் ரஜினிகாந்த் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை பெற்றார். இது பற்றி அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:



மதிப்பிற்குரிய ஜனாதிபதி அவர்களையும் ,பிரதமர் அவர்களையும் சந்தித்து வாழ்த்துகளை பெற்றதில் பெரும் மகிழ்ச்சி. மேலும், என்னை நெஞ்சார வாழ்த்திய அரசியல் தலைவர்களுக்கும், அரசு அதிகாரிகளுக்கும், அனைத்துத் துறை நண்பர்களுக்கும், ரசிகர்களுக்கும், மக்களுக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றி என்று பதிவிட்டுள்ளார்.

Source, Image Courtesy: Twiter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News