Kathir News
Begin typing your search above and press return to search.

சொகுசுக் கப்பலில் போதைப்பொருள்: நடிகர் ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் மனு தள்ளுபடி!

மும்பையில் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு சொகுசுக் கப்பலில் போதைப்பொருட்களுடன் கேளிக்கை விருந்து நடத்தப்பட்டதில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 18 பேரை போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட உடன் ஆர்யன்கான் உள்ளிட்டோருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

சொகுசுக் கப்பலில் போதைப்பொருள்: நடிகர் ஷாருக்கான் மகனுக்கு ஜாமீன் மனு தள்ளுபடி!

ThangaveluBy : Thangavelu

  |  8 Oct 2021 12:39 PM GMT

மும்பையில் கடந்த வாரம் சனிக்கிழமை இரவு சொகுசுக் கப்பலில் போதைப்பொருட்களுடன் கேளிக்கை விருந்து நடத்தப்பட்டதில் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் உள்ளிட்ட 18 பேரை போதைப்பொருட்கள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட உடன் ஆர்யன்கான் உள்ளிட்டோருக்கு 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார்.

இந்நிலையில், ஆர்யன்கான் தனக்கு ஜாமீன் வழங்கக்கோரி மனுத்தாக்கல் செய்திருந்தார். இது பற்றிய வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது நீதிபதிகள் ஆர்யன்கானுடைய ஜாமீன் மனு ரத்து செய்யப்படுவதாக உத்தரவு பிறப்பித்தனர்.

நீதிமன்ற காவல் பிறப்பிக்கப்பட்ட நிலையில் நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன்கான் மற்றும் அவரது சகாக்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து அவர்கள் தனிமைப்படுத்தப்பட்ட அறையில் அடைக்கப்பட்டனர்.

Source: Dinakaran

Image Courtesy:Mint


Next Story
கதிர் தொகுப்பு
Trending News