Kathir News
Begin typing your search above and press return to search.

தீபாவளிக்கு சிம்புவின் 'மாநாடு' வெளிவராது: தயாரிப்பாளர் கூறும் காரணம் இதுதான்!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் அடுத்த மாதம் 4ம் தேதி தீபாவளி அன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது.

தீபாவளிக்கு சிம்புவின் மாநாடு வெளிவராது: தயாரிப்பாளர் கூறும் காரணம் இதுதான்!

ThangaveluBy : Thangavelu

  |  18 Oct 2021 9:56 AM GMT

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள மாநாடு திரைப்படம் அடுத்த மாதம் 4ம் தேதி தீபாவளி அன்று வெளிவருவதாக அறிவிக்கப்பட்டது. அன்றை நாள் ரஜினியின் அண்ணாத்த படமும் வெளிவர இருக்கிறது. இதனால் இந்த இரண்டு படங்களுக்கு இடையே கடும் போட்டி ஏற்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது மாநாடு படம் தீபாவளி ரேஸில் இருந்து பின்வாங்குவதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இது பற்றி அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திரையுலகிற்கும், திரைப்பட ரசிகர்களுக்கும் வணக்கம்... நீடித்த பெரும் கொரோனா சிரமங்களுக்கிடையே சில வருட உழைப்பின் பயனாக அறுவடைக்குக் காத்திருக்கிறேன். 'மாநாடு' முழுவீச்சில் தயார் செய்து தீபாவளி வெளியீடாக வந்துவிட அனைத்தும் செய்யப்பட்டுவிட்டது. யாரோடும் போட்டி என்பதல்ல... ஒரு விழா நாளில் மக்கள் ஒன்றுக்கு மேற்பட்ட படங்களைப் பார்ப்பது வழக்கம், அதைக் கருத்தில் வைத்தே தீபாவளி வெளியீடாக வர முடிவெடுத்தோம்.


போட்டி என்ற ரீதியில் பட வெளியீட்டை நான் ஒருபோதும் பார்ப்பதில்லை. அப்படி பார்ப்பது வியாபார புத்திசாலித்தனம் இல்லை. நமது மாநாடு படம் நன்றாக திருப்தியாக வந்துள்ளது. அதன்மீது மிகப்பெரிய நம்பிக்கையும் உள்ளது. வந்து பார்ப்போம் என இறங்கிவிடலாம்தான். ஆனால் என்னை நம்பி படம் வியாபார ஓப்பந்தம் செய்துகொண்டவர்கள் பாதிக்கப்படக்கூடாது. அதேபோல் வினியோகஸ்தர்களும், திரையரங்க வெளியீட்டிற்காக பணம் போட்டவர்களும் என் பட வெளியீட்டின் மூலம் லாபம் காண வேண்டும். நட்டமடையக்கூடாது. சில காரணங்களுக்காக ஏன் என் படமும், அதன் வெற்றியும் பலியாக வேண்டும்? ஆதலால் மாநாடு தீபாவளிக்கு வெளிவராமல் சற்று தள்ளி வெளியாக உள்ளது. இவ்வாறு அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

Source: Maalaimalar

Image Courtesy:Movie Crow


Next Story
கதிர் தொகுப்பு
Trending News