Kathir News
Begin typing your search above and press return to search.

கடனை செலுத்தியும் பத்திரத்தை தராமல் ஏமாற்றுகிறார்: ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் புகார்.!

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடனை செலுத்தியும் பத்திரத்தை தராமல் ஏமாற்றுகிறார்: ஆர்.பி.சவுத்ரி மீது நடிகர் விஷால் புகார்.!

ThangaveluBy : Thangavelu

  |  9 Jun 2021 12:10 PM GMT

திரைப்பட தயாரிப்பாளர் ஆர்.பி. சவுத்ரி மீது நடிகர் விஷால் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கிட்டத்தட்ட 90 படங்களுக்கு மேல் தயாரித்தவர் ஆர்.பி. சவுத்தரி. இவர் தற்போது சினிமா படங்களுக்கு வட்டிக்கு விடும் தொழிலும் செய்து வருகிறார். அதே போன்று நடிகர் விஷால் திரைப்படம் எடுப்பதற்காக ஆர்.பி.சவுத்தரியிடம் கடன் வாங்கியுள்ளார்.




இந்நிலையில், தான் பெற்ற கடன் தொகையையும், அதற்கான வட்டியையும் சேர்த்து 4 மாதங்களுக்கு முன்பே செலுத்தியுள்ளார். ஆனால் தான் கடன் வாங்கும்போது கையெழுத்திட்ட பத்திரங்களை ஆர்.பி.சவுத்ரி இன்னும் திருப்பி தராமல் மோசடி செய்து வருகிறார் என விஷால் பாண்டி பஜார் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த மனுவில் ஆர்.பி.சவுத்ரி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தனது பத்திரங்களை உடனடியாக மீட்டு தரவேண்டும் என புகாரில் குறிப்பிட்டுள்ளார். பிரபல தயாரிப்பாளர் மீது நடிகர் ஒருவர் புகார் அளித்துள்ள சம்பவம் சினிமா வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News