பூஜா ஹெக்டே'வுடன் தகாத முறையில் நடந்த விமான பணியாளர் - நடவடிக்கையில் நிறுவனம்
விமானப் பணியாளர் தகாத முறையில் நடந்ததாக நடிகை பூஜா ஹெக்டே புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
By : Mohan Raj
விமானப் பணியாளர் தகாத முறையில் நடந்ததாக நடிகை பூஜா ஹெக்டே புகார் கொடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
நடிகை பூஜா ஹெக்டே மும்பையிலிருந்து கிளம்பிய தனியார் விமானத்தில் பணியாளர் ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்டதாக குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து தனது ட்விட்டர் பதிவில் அவர் தெரிவித்ததாவது, 'மும்பையிலிருந்து இன்று கிளம்பும் போது இன்டிகோ விமானத்தில் ஊழியர் ஒருவர் பெண்களுடன் தகாத முறையில் நடந்து கொண்டார் அவர் நடந்து கொண்ட விதம் அகங்காரம் ஆனது.
எந்தவித காரணமும் இல்லாமல் எங்களை அச்சுறுத்தும் விதத்தில் பேசினார், நான் இதுபோன்ற விஷயங்களுக்கு எல்லாம் ட்வீட் போடுவதில்லை ஆனால் இன்றைக்கு எங்களுக்கு நடந்த மிக மோசமான சம்பவம் ஆகும்' என தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டுக்கு உடனே பதிலளித்துள்ள இண்டிகோ நிறுவனம் பூஜா பயணம் செய்த பி.என்.ஆர் நம்பர் மற்றும் தொடர்பு எண் ஆகியவற்றை கேட்டுள்ளது, மேலும் சம்பந்தப்பட்டவர் மீது தகுந்த நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளது.