Begin typing your search above and press return to search.
தற்கொலை செய்துகொண்ட நடிகை - சிக்கிய கடிதம்
காதல் தோல்வியால் சினிமா நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

By :
காதல் தோல்வியால் சினிமா நடிகை ஒருவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
சினிமாவில் நடிகையாக நடித்தவர் பவுலின் ஜெசிகா எனும் தீபா. வாய்தா படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார், இவர் விருகம்பாக்கத்தில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று மாலை தற்கொலை செய்து கொண்டார்.
அவர் வீட்டில் பிரேதத்தை கைப்பற்றி போலீசார் நடத்திய விசாரணையில் கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அதில் தான் ஒருவரை காதலித்ததாகவும், அது கைகூடவில்லை என்பதன் காரணமாக அதனால் இந்த உலகத்தை விட்டு பிரிந்து செல்வதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது குறித்து போலீஸ் தரப்பினர் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
Next Story