ரம்யாவை திட்டிய நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த அனிதா சம்பத்!
ரம்யாவை திட்டிய நெட்டிசன்களுக்கு பதிலடி கொடுத்த அனிதா சம்பத்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பல்வேறு குழப்பங்களும் பல்வேறு சண்டைகள் நடைபெற்று 106- நாட்கள் முடிந்து கடந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவடைந்தது. அப்போட்டியில் ஆரி வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிக்பாஸ் போட்டியாளர்களில் ஒருவரான ரம்யா பாண்டியனை நெட்டிசன்கள் இன்னும் விமர்சனம் செய்து வருகையில் அந்த விமர்சனம் குறித்து அனிதா சம்பத் அவரது சமூக வளைதளத்தில் பதிலடி கொடுத்துள்ளார்.

பிக்பாஸ் வின்னர் ஆரியை கடுமையாக விமர்சனம் செய்தவர் ரம்யா. அந்த வகையில் ஆரியின் ஆதரவாளர்கள் ரம்யாவை பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போதும், வெளியே வந்த பின்னரும் சரி கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்த விமர்சனத்திற்கு முதலில் ரம்யா 'அது அவர்களுடைய கருத்து' என பதில் கூறிய ரம்யா, தற்போது இதற்கு முற்றுப்புள்ளி வைக்க ஒரு பதிவை தனது இன்ஸ்டாஸ்டோரியில் பதிவு செய்துள்ளார். அதில் கூறியது: பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்து விட்டது, எனவே அந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களை குறிப்பாக பெண் போட்டியாளர்களை தயவுசெய்து திட்டாதீர்கள். நம்முடைய கடமை அனைத்து பெண்களையும் மதிக்க வேண்டும் என்பதுதான். ஆகையால் இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று பதிவு செய்துள்ளார்.

இதை பார்த்த அனிதா: பிக்பாஸ் நிகழ்ச்சி என்பது ஒரு விளையாட்டு. அது முடிந்துவிட்டது. பிக்பாஸ் வீட்டில் 18 போட்டியாளர்களுடன் இருக்கும் போது மன அழுத்தம் கொஞ்சம் அதிகமாக இருக்கும். அப்போது வெளிப்பட்ட சில குணங்கள் தினசரி வெளிப்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம் என்றும் பிக்பாஸ் போட்டியாளர்களை குறிப்பாக பெண் போட்டியாளர்களையும், அவர்களுடைய குடும்பத்தை பற்றியும் நெகட்டிவ் கமெண்ட் செய்வதை தயவு செய்து நிறுத்துங்கள் அனைத்து போட்டியாளர்களையும் ரசிக்க பிக்பாஸ் ஒன்றும் குக் வித் கோமாளி மாதிரி கிடையாது. பிக்பாஸில் இருக்கும் எல்லோரையும் நீங்கள் ரசிக்க முடியாது என்று பதிவிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.