Begin typing your search above and press return to search.
அசுர வேகத்தில் நிறைவடைந்த 'காசேதான் கடவுளடா' படப்பிடிப்பு !
Cinema News.

By :
ஆர் கண்ணன் இயக்கிய 'காசேதான் கடவுளடா' படம் ஒரே கட்டமாக முடிந்துள்ளது.
சித்ராலாயா கோபு இயக்கிய 'காசேதான் கடவுளடா' படத்தின் அதிகாரபூர்வ ரீமேக்கை இயக்குனர் ஆர்.கண்ணன் யோகி பாபு, மிர்ச்சி சிவா'வை வைத்து இயக்கியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக முடிந்துள்ளது.
இது குறித்து இயக்குனர் ஆர்.கண்ணன் கூறும் போது, "எனது முந்தைய சில படங்களின் படப்பிடிப்பை விரைவாக முடித்திருக்கிறேன் ஆனால் காசேதான் கடவுளடா முற்றிலும் வேறானது. பொது முடக்க காலத்தில் இப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பித்தோம். இவ்வளவு விரைவாக இப்படத்தை முடிக்க நடிகர்கள் மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த், யோகிபாபு, ஊர்வசி , கருணாகரன் உட்பட்ட நடிகர்களும் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களும் மட்டுமே தான் காரணம், அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய உழைப்பால் தான் இது சாத்தியமானது" என கூறினார்.
Next Story