Begin typing your search above and press return to search.
வடிவேலுவை கோபப்படுத்திய தனியார் சேனல் !
Breaking News.

By :
தனியார் சேனல் ஒன்றிடம் கடுகடுத்துள்ளார் வடிவேலு.
இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி படப்பிடிப்பில் ஏற்பட்ட பிரச்சினையால் ரெட் கார்டு போடப்பட்டு, வடிவேலு படங்களில் நடிக்க மறைமுக தடை விதிக்கப்பட்டது. நான்கு வருடங்களுக்குப் பிறகு நேற்று முன் தினம் அந்தத் தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனையடுத்து "தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பமும் என்னுடைய ரசிகர் மன்றம் தான். அடுத்து இரண்டு படங்களில் நாயகனாக நடித்த பின் காமெடி வேடங்களுக்கு திரும்புவேன்" என மகிழ்ச்சியுடன் வடிவேலு கூறினார்.
இந்நிலையில் செய்தி சேனல் ஒன்று வடிவேலுவுக்கு வாழ்த்து சொல்ல போனில் தொடர்பு கொண்ட போது அவரிடம் 'அரசியலுக்கு முன்ன மாதிரி வருவீங்களா ' என்று கேட்கப்பட்டதற்கு கொஞ்சம் கோபமான வடிவேலு, பேசிட்டு இருக்கும் போது, உள்ள குச்சிய விடக்கூடாது, தொடர்ந்து நடிக்க வேண்டும் கடுப்புடன் கூறியுள்ளார்.
Next Story